சீர்காழி தொகுதி – தமிழ்நாடு நாள் பெருவிழா

144

நவம்பர் 1 தமிழ்நாடு நாள் பெருவிழா சீர்காழி தொகுதி சார்பாக சீர்காழியில்  தமிழ்நாட்டுக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.இந்நிகழ்வில் தொகுதி செயலாளர் ஜவஹர் நெடுஞ்செழியன் அவர்கள் தலைமை வகித்தார். தொகுதி தலைவர் சுப்பிரமணியன் தொகுதி இணைச்செயலாளர் சிவச்சந்திரன், தொகுதி பொருளாளர் இளவரசன்,

நகர செயலாளர் சுனைச்செல்வம், மாவட்ட சுற்றுச்சூழல் பாசறை செயலாளர் முருகேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட செயலாளர் காளிதாசன் மற்றும் மாவட்ட தலைவர் தி.குமார் அவர்கள் காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.மாநில மகளிர் பாசறை செயலாளர் பி.காளியம்மாள் அவர்கள் கொடி ஏற்றி கருத்துரை வழங்கினார்.

Exit mobile version