முகப்பு கட்சி செய்திகள்

ஆலங்குளம் தொகுதி – நெடுஞ்சாலையை சீரமைக்க சொல்லி ஆர்ப்பாட்டம்

92

10/01/2021 அன்று ஆலங்குளம் காமராசர் சிலை அருகில் ஆலங்குளம் ஒன்றிய செயலாளர் தமிழர்திரு அ.ராமலிங்கம் அவர்களின் தலைமையில் “திருநெல்வேலி – தென்காசி நெடுஞ்சாலையினை சீரமைக்க கோரியும், தமிழக நெடுஞ்சாலைத்துறையை” கண்டித்தும் ஆலங்குளம் தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் மாபெரும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில கொள்கை பரப்பு செயலாளர் தமிழர்திரு.பசும்பொன் அவர்கள் நெடுஞ்சாலைத்துறைக்கு எதிரான கோசங்ளை எழுப்பி, கண்டன உரை ஆற்றினார். இந்நிகழ்வில் #மாவட்ட_தொகுதி_ஒன்றிய மற்றும் கிளை பொறுப்பாளர்கள் உட்பட நாம் தமிழர் உறவுகள் பெரும்பாலானோர் கலந்து கொண்டனர்.

 

Exit mobile version