முகப்பு தலைமைச் செய்திகள்

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திண்டுக்கல் மாவட்ட இணையவழி கலந்தாய்வு

229

சுற்றறிக்கை: மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் திண்டுக்கல் மாவட்ட இணையவழி கலந்தாய்வு

கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில், வருகின்ற 24-07-2020 வெள்ளிக்கிழமையன்று, திண்டுக்கல் மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான இணைய வழி கலந்தாய்வு நடைபெறவிருக்கின்றது.

நாள் நேரம் கலந்தாய்வு விவரம்
24-07-2020

வெள்ளி

காலை 10:30
மணியளவில்
திண்டுக்கல் நடுவண் மாவட்டம்

(திண்டுக்கல், ஆத்தூர், நிலக்கோட்டை தொகுதிகளுக்கான கலந்தாய்வு)

இணையவழி கலந்தாய்வில் பங்கேற்பதற்கான வழிமுறைகள் மற்றும் கடவுச்சொல் தங்கள் தொகுதிச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும்.
பிற்பகல் 12.00 மணியளவில் திண்டுக்கல் கிழக்கு மாவட்டம்

(நத்தம், வேடசந்தூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு)

பிற்பகல் 1.30 மணியளவில் திண்டுக்கல் மேற்கு மாவட்டம்

(பழனி, ஒட்டன்சத்திரம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு)

தொகுதிக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

நா.சந்திரசேகரன்

பொதுச்செயலாளர்

Exit mobile version