முகப்பு கட்சி செய்திகள்

மரபுவழியாக இயற்கை ஏற்படுத்தி தந்த குடகனாறு நீர் உரிமையை மீட்டு மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும் மாவட்ட ஆட்சியரிடம் மனு- ஆத்தூர் தொகுதி

51

திண்டுக்கல் மாவட்டத்தின் பெரும் அடையாளமாக திகழும் குடகனாறு என்னும் சிற்றாறு இந்த ஆறு மேற்கு தொடர்ச்சி மலை புல்லாவெளி என்ற இடத்தில் உற்பத்தியாகி காமராஜர் நீர்த்தேக்கம் அழகாபுரி அணை தாண்டி அமராவதி இல் கலந்து பிறகு கரூருக்கு கிழக்கே காவிரியில் கலக்கிறது, திண்டுக்கல் குடிநீர் ஆதாரமாக விளங்குவது காமராஜர் நீர்த்தேக்கம் ஆத்தூர் வேடசந்தூர் குஜிலியம்பாறை வருவாய் பட்டத்திற்கு வாழும் மக்களின் குடிநீர் வேளாண்மை ஆதாரமாக விளங்குவது குடகனாறு என்னும் இயற்கை தந்த கொடை இதை அதிகார மெத்தனத்தால் சூறையாடப்பட்டு பத்தாண்டுகளுக்கு மேல் நீர்வரத்து இல்லாமல் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகி வாழ்வாதாரத்தை இழந்து வருகின்றனர் இதை காக்கும் பொருட்டு வேளாண் சங்கங்களுடன் இணைந்து நாம் தமிழர் கட்சி களத்தில் நிற்கிறது.

நன்றி
ஆத்தூர் தொகுதி பொறுப்பாளர்கள்
திண்டுக்கல் நடுவன் மாவட்டம்
9786615315

Exit mobile version