முகப்பு கட்சி செய்திகள்

பலகோடி பனை திட்டம்- நாம் தமிழர் கட்சி-ஆத்தூர் சட்டமன்றத்தொகுதி

726

நாம் தமிழர் கட்சியின் பலகோடி பனை திட்டத்தின் கீழ் ஆத்தூர் சட்டமன்றத்தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பாக லட்சுமணன்பட்டிகுளம், குடகனாற்று கரை, தாமரை குளம், செங்குளம், கருங்குளம் மற்றும் அவில்தார் குளம் போன்ற குளங்களில் சுமார் 20,000 பனை விதைகள் நடப்பட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக மூன்றாம் கட்டமாக நி.பஞ்சம்பட்டி மற்றும் செம்பட்டி பகுதிகளில் உள்ள குளங்களில் 5000 பனை விதை மற்றும் புங்கை மரங்கள் நடும் விழா சிறப்பாக 07/10/2018 ஞாயிறு அன்று நடைபெற்றது. இதற்கு திண்டுக்கல் மாவட்ட நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு.மு.ப. கணேசன் ஆத்தூர் சட்டமன்றதொகுதி நாம் தமிழர் கட்சி செயலாளர் திரு. இர. மரிய குணசேகரன் தலைமை தாங்கினார்.

Exit mobile version