முகப்பு தலைமைச் செய்திகள்

அறிவிப்பு: பெருந்தமிழர் அயோத்திதாசப் பண்டிதர் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு

113

05-05-2018 பெருந்தமிழர் அயோத்திதாசப் பண்டிதர் நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு | நாம் தமிழர் கட்சி

பெருந்தமிழர் அயோத்திதாசப் பண்டிதர் அவர்களின் 104ஆம் ஆண்டு நினைவுநாளை போற்றும் விதமாக 05-05-2018 சனிக்கிழமை காலை 10 மணியளவில், சென்னை, தாம்பரம் – சானடோரியம், தேசிய சித்த மருத்துவ நிறுவன (அயோத்திதாச பண்டிதர் மருத்துவமனை) வளாகத்தில் அமைந்துள்ள அயோத்திதாச பண்டிதரின் திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செய்யவிருக்கிறார்.

அவ்வயம் நாம் தமிழர் உறவுகள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு அன்புரிமையுடன் அழைக்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

Exit mobile version