முகப்பு தலைமைச் செய்திகள்

கேரளா, கர்நாடக, ஆந்திர அரசின் தமிழர் விரோதப்போக்கை கண்டித்து கோவையில் ஆர்ப்பாட்டம் – 17-09-2016

109

தமிழக மக்களின் நீர்வள ஆதாரத்தைத் தடுக்கும் கேரளா, கர்நாடக, ஆந்திர அரசின் தமிழர் விரோதப்போக்கை கண்டித்து வருகின்ற 17-09-2016 சனிக்கிழமை காலை 10 மணிக்கு கோவை, ஆர்.எஸ்.புரம், காந்தி பூங்காவில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் தலைமையில் மாபெரும் தமிழர் திரள் கண்டன ஆர்ப்பாட்டம். அனைவரும் அணிதிரண்டு வாரீர்!

இனவுணர்வும் மான உணர்வும் கொண்ட ஒவ்வொரு தமிழனும் ஒன்றாகக் கூடுவோம்!
எழுக தமிழா! எழுக!
இன உணர்வு கொண்டு எழுக!
இனத்தின் உரிமைக்காக்க எழுக!
திரள்வோம்! திரள்வோம்!
பகைமிரள திரள்வோம்!
பைந்தமிழ் இனத்தீரே!
நாம் தமிழர்!

naam-tamilar-protest-kovai-cauveri-water-dispute-issue

Exit mobile version