தலைமை அறிவிப்பு – ஒழுங்கு நடவடிக்கை

15

க.எண்: 2026010042
நாள்: 26.01.2026

அறிவிப்பு
கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியைச் சேர்ந்த இரா.றாபி (28074263191), புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி தொகுதியைச் சேர்ந்த வே.செந்தில்குமார் (14121062138), கு.சொர்ண காளீஸ்வரன் (15674161571), ஆலங்குடி தொகுதியைச் சேர்ந்த சாமி.அமுதன் (37487186268) ஆகியோர் கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயற்பட்டதையடுத்து ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையின்படி, அவர்கள் வகித்து வந்த பொறுப்பிலிருந்தும், அடிப்படை உறுப்பினரிலிருந்தும் முழுமையாக நீக்கப்படுகிறார்கள். அதனால், அவர்களது கருத்திற்கோ, செயலுக்கோ இனி கட்சி பொறுப்பேற்காது.
நாம் தமிழர் கட்சி உறவுகள் இவர்களோடு கட்சி, அரசியல் சார்ந்த செயல்பாடுகளில் தொடர்பு வைத்துக்கொள்ள வேண்டியதில்லை எனவும்
கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி