க.எண்: 2025110969
நாள்: 11.11.2025
அறிவிப்பு:
| வாக்குரிமையைப் பாதுகாப்போம் வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிரத் திருத்தத்தை உடனடியாக நிறுத்தக்கோரி, மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் கண்டனப் பேருரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சிநாள்: கார்த்திகை 01 | 17-11-2025 காலை 10 மணியளவில்இடம்:இராஜரத்தினம் விளையாட்டுத் திடல் அருகில் சென்னை – எழும்பூர்
|
வாக்காளர் பட்டியல் (SIR) சிறப்பு தீவிரத் திருத்தத்தை உடனடியாக நிறுத்தக்கோரி நாம் தமிழர் கட்சி சார்பாக, வருகின்ற கார்த்திகை 01ஆம் நாள்
17-11-2025 அன்று காலை 10 மணியளவில் சென்னை, எழும்பூரில் உள்ள இராஜரத்தினம் விளையாட்டுத் திடல் அருகில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறவிருக்கிறது.
இம்மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி



