க.எண்: 2025090785
நாள்: 23.09.2025
அறிவிப்பு:
திருவண்ணாமலை மண்டலக் கலந்தாய்வு
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில், திருவண்ணாமலை மண்டலத்தைச் சேர்ந்த கட்சி மற்றும் பாசறைகளின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டம், மாநிலப் பொறுப்பாளர்களின் முன்னிலையில் நாளை
23-09-2025 அன்று காலை 10 மணி முதல் திருவண்ணாமலை, 12 குறிஞ்சி நகர், வேங்கிக்கால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில், அறிவியல் பூங்கா எதிரில் உள்ள வேல்ஸ் ஓட்டுநர் பயிற்சிப் பள்ளியில் நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்வில் திருவண்ணாமலை மண்டலத்திற்குட்பட்ட கட்சியின் மாநில, மண்டல, மாவட்டப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
தொடர்புக்கு:
சதீஷ் பாபு 9994063080,
சிவராஜ்: +919566993959
சரவணன்: +919025649103
சிவா:+919944577539
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி