தலைமை அறிவிப்பு – ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்கள் நடத்தும் மலை வளமே, மண் வளம்! மலைகளின் மாநாடு உணர்வின் உரை: செந்தமிழன் சீமான்

3

க.எண்: 2025090779

நாள்: 17.09.2025

அறிவிப்பு:

ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்கள் நடத்தும்
மலை வளமே, மண் வளம்!
மலைகளின் மாநாடு
உணர்வின் உரை:
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சிநாள்: புரட்டாசி 11 | 27-09-2025 | மாலை 04 மணியளவில்

இடம்: வள்ளலார் திடல்
தர்மபுரி

மலை வளமே, மண் வளம்! என்ற முழக்கத்தை முன்வைத்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டம் சார்பாக புரட்டாசி 11ஆம் நாள் (27.09.2025) மாலை 04 மணியளவில் தர்மபுரி வள்ளலார் திடலில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் ‘மலைகளின் மாநாடு’ மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.

இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,
நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு

 

கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி