க.எண்: 2025090777
நாள்: 17.09.2025
அறிவிப்பு:
சமூகநீதிப் போராளி!
தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நாள்: புரட்டாசி 02 | 18-09-2025 காலை 10 மணியளவில் இடம்: அண்ணல் காந்தி மண்டபம்
|
சாதி ஒழிப்புக்காகவும், சமத்துவத்துக்காகவும் வாழ்நாள் முழுமைக்கும் போராடிய பெருந்தமிழர்! விளிம்புநிலை மக்களின் விடுதலைக்காகவும், உயர்வுக்காகவும் பாடுபட்ட புரட்சியாளர்! சமூகநீதிப் போராளி நம்முடைய தாத்தா இரட்டைமலை சீனிவாசன் அவர்களின் நினைவுநாளையொட்டி, நாம் தமிழர் கட்சி சார்பாக, புரட்டாசி 02 (18-09-2025) காலை 10 மணியளவில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் தாத்தாவின் பெரும்புகழைப் போற்றும் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்வில், கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி