க.எண்: 2025080753
நாள்: 28.08.2025
அறிவிப்பு:
| நாம் தமிழர் கட்சி – ஒருங்கிணைந்த கோயம்புத்தூர் மாவட்டம் நடத்தும் நிலத்தை இழந்தால்,பலத்தை இழப்போம்! மாபெரும் பொதுக்கூட்டம்உணர்வின் உரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சிநாள்: ஆவணி 29 | 14-09-2025 | மாலை 04 மணியளவில் இடம்: இராஜவீதி தேர்நிலை திடல்
|
உன் இடத்தினை உறுதி செய்! இனத்தை முன்னிறுத்து! இருக்க இடமற்றவன் அனைத்துலகம் பேச அருகதையற்றவன்! என்ற முழக்கத்தை முன்வைத்து, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த கோவை மாவட்டம் சார்பாக ஆவணி 29ஆம் நாள் (14.09.2025) மாலை 04 மணியளவில் கோயம்புத்தூரில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் ‘நிலத்தை இழந்தால், பலத்தை இழப்போம்!’ மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,
நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி



