க.எண்: 2025080753
நாள்: 28.08.2025
அறிவிப்பு:
(23-08-2025 அன்று கனமழை காரணமாக ஒத்திவைக்கப்பட்ட பொதுக்கூட்டத்திற்கான நாள் அறிவிப்பு)
நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை நடத்தும் சொந்தநிலத்தில் அகதியாகும் தமிழர்கள் மாபெரும் பொதுக்கூட்டம்உணர்வின் உரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சி நாள்: ஆவணி 21 | 06-09-2025 | மாலை 04 மணியளவில் இடம்: மாநகரப் பேருந்து நிலையம் எதிரில்
|
வளர்ச்சி என்ற பெயரில் வேளாண் விலைநிலங்களையும், குடியிருப்பு நிலங்களையும் அபகரித்து, இயற்கை கனிம வளங்களைச் சுரண்டி, நிலம், நீர், காற்றினை நஞ்சாக்கி, சுற்றுச்சூழலைப் பாழாக்கும் அனைத்து ஆபத்தானத் திட்டங்களை எதிர்த்தும், நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை சார்பாக ஆவணி 21ஆம் நாள் (06.09.2025) மாலை 04 மணியளவில் காஞ்சிபுரத்தில், தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் ‘சொந்த நிலத்தில் அகதியாகும் தமிழர்கள்!’ மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறவிருக்கிறது.
இம்மாபெரும் பொதுக்கூட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும்,
நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி