க.எண்: 2025080704
நாள்: 05.08.2025
அறிவிப்பு:
வீரத்தமிழர் முன்னணி நடத்தும் வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் கோட்டை மீட்புப் போராட்டம்மீட்புரை: செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் | நாம் தமிழர் கட்சிநாள்: ஆவணி 01 | 17-08-2025 மாலை 03 மணியளவில்இடம்: செஞ்சி (இந்தியன் வங்கி எதிரில்) விழுப்புரம் மாவட்டம் |
தமிழ் மன்னர் வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் முன்னோர்களால் கட்டப்பட்ட செஞ்சிக்கோட்டையை யுனஸ்கோ நிறுவனம் மராத்திய மன்னர் சிவாஜியின் 12 கோட்டைகளில் ஒன்றாக சேர்த்து அறிவித்திருப்பதற்கு இந்திய ஒன்றிய அரசு துணைநிற்பதும், இவ்வரலாற்று திரிபைத் தடுத்து நிறுத்த வேண்டிய தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்ப்பதைக் கண்டித்தும், நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக, ஆவணி 01ஆம் நாள் (17.08.2025) மாலை 03 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் (இந்தியன் வங்கி எதிரில்), தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் கோட்டை மீட்புப் போராட்டம் நடைபெறவிருக்கிறது.
இம்மாபெரும் போராட்டத்தில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும், பொதுமக்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி