வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் முன்னோர்களால் கட்டப்பட்ட செஞ்சிக்கோட்டையில் உள்ள வெங்கட்ராமர் கோயில்: சீமான் நேரில் வழிபாடு!

17

தமிழ் மன்னர் வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் முன்னோர்களால் கட்டப்பட்ட செஞ்சிக்கோட்டையை யுனஸ்கோ நிறுவனம் மராத்திய மன்னர் சிவாஜியின் 12 கோட்டைகளில் ஒன்றாக சேர்த்து அறிவித்திருப்பதற்கு இந்திய ஒன்றிய அரசு துணைநிற்பதும், இவ்வரலாற்று திரிபைத் தடுத்து நிறுத்த வேண்டிய தமிழ்நாடு அரசு வேடிக்கை பார்ப்பதைக் கண்டித்தும், நாம் தமிழர் கட்சியின் வீரத்தமிழர் முன்னணி சார்பாக, ஆவணி 01ஆம் நாள் (17-08-2025) மாலை 03 மணியளவில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் (இந்தியன் வங்கி எதிரில்), நடைபெற்ற வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் கோட்டை மீட்புப் பொதுக்கூட்டத்திற்கு முன்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் செஞ்சிக்கோட்டை வாயிலில் உள்ள வெங்கட்ராமர் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்து, கோயிலினுள் இருந்த வீரப்பெரும்பாட்டன் கோனேரிக்கோன் சிலைக்கு மலர் வணக்கம் செலுத்திவிட்டு, இராணிக்கோட்டை வாயிலில் உள்ள கல்வெட்டுகளைப் பார்வையிட்டார். உடன் விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த மாநில மண்டல மாவட்ட நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.

17-08-2025 | தமிழ் மன்னர் கோனேரிக்கோன் கட்டிய வரதராஜப் பெருமாள் கோவிலில் சீமான் வழிபாடு | செஞ்சி

செஞ்சிக்கோட்டை தமிழர்களின் கோட்டை! - வரலாற்று சான்றுகளுடன் சிறப்பு காணொளி திரையிடல் | கோனேரிக்கோன்

07-08-2025 சீமான் மீட்புரை | வீரப்பெரும்பட்டன்  கோனேரிக்கோன் கோட்டை மீட்புப் பொதுக்கூட்டம் | செஞ்சி