முகப்பு தலைமைச் செய்திகள்

தலைமை அறிவிப்பு – கள் எங்கள் உணவு! கள் எங்கள் உரிமை! உழவர் பாசறை நடத்தும் செந்தமிழன் சீமான் பனை மரம் ஏறி கள் இறக்கும் போராட்டம்

101

க.எண்: 2025060592

நாள்: 11.06.2025

அறிவிப்பு:

கள் எங்கள் உணவு! கள் எங்கள் உரிமை!

உழவர் பாசறை நடத்தும்
செந்தமிழன் சீமான்
பனை மரம் ஏறி
கள் இறக்கும் போராட்டம்

நாள்:
ஆனி 01 | 15-06-2025 காலை 10 மணியளவில்

இடம்:
குலசேகரப்பட்டினம்
பெரிய தாழை, திருச்செந்தூர்
தூத்துக்குடி மாவட்டம்

வருகின்ற 15-06-2025 அன்று தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே பெரிய தாழை, குலசேகரப்பட்டினத்தில் ‘கள் எங்கள் உணவு! கள் எங்கள் உரிமை!’ என்ற முழக்கத்தை முன்னிறுத்தி நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறை சார்பாக
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் பனை மரம் ஏறி கள் இறக்கும் உரிமை மீட்புப் போராட்டத்தை முன்னெடுக்கவிருக்கிறார்.

இந்நிகழ்வில் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதிப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், நாம் தமிழர் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

– தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு


கு.செந்தில்குமார்
தலைமை நிலையச் செயலாளர்
நாம் தமிழர் கட்சி

Exit mobile version