சாம்சங் தொழிலாளர்களின் வேலை நிறுத்தப் போராட்டம்: சீமான் நேரில் ஆதரவு!

222

எட்டு மணி நேர வேலை, ஊதிய உயர்வு, தொழிற்சங்க அங்கீகாரம் உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் கேட்டு, கடந்த 30 நாட்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் ‘சாம்சங்’ தொழிலாளர்களின் வீடுகளுக்குள் நள்ளிரவில் புகுந்து, தேடி தேடி அடித்து, சிறைப்படுத்தி, அவர்களின் குடும்பத்தினரை மிரட்டும் திமுக அரசின் கொடுங்கோன்மைச்செயலைக் கண்டிக்கும் விதமாகவும், சாம்சங் தொழிலாளர்களின் போராட்டக் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தும் விதமாகவும், 10-10-2024 அன்று நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தொழிலாளர்களைச் சந்தித்து அவர்களது கோரிக்கைகளைக் கேட்டறிந்தார்.

🔴நேரலை 10-10-2024 சீமான் கண்டனவுரை | சாம்சங் தொழிலாளர்களுடன் சீமான் | சுங்குவார் சத்திரம்

🔴10-10-2024 - செய்தியாளர் சந்திப்பு | சாம்சங் தொழிலாளர்களுடன் சீமான் | சுங்குவார் சத்திரம்