பணி நிரந்தரம் வேண்டி, மக்கள் நலப்பணியாளர்களின் காத்திருக்கும் போராட்டத்தில் சீமான் பங்கேற்று கண்டனவுரை

550

தமிழகம் முழுவதுமுள்ள 13500க்கும் மேற்பட்ட மக்கள் நலப் பணியாளர்களின் நீண்டகாலப் போராட்டக்கோரிக்கைகளான பணி நிரந்தரம் மற்றும் காலமுறை ஊதியம் வழங்கும் அறிவிப்பை, நடப்பு சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே வெளியிடக்கோரி, சென்னை சைதாப்பேட்டை, பனகல் மாளிகை முன்பு, தமிழ்நாடு மக்கள் நலப்பணியாளர் சங்கம் முன்னெடுத்துவரும் மாபெரும் காத்திருக்கும் போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் விதமாக, 21-04-2023 அன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் நேரில் பங்கேற்று, போராட்டக் கோரிக்கைகளை வலியுறுத்தி உரையாற்றினார்.