முகப்பு கட்சி செய்திகள்

குறிஞ்சிப்பாடி சட்டமன்றத் தொகுதி மாத கலந்தாய்வு கூட்டம்

48

தாய்த்தமிழ்
உறவுகளுக்கு வணக்கம் 🙏

குறிஞ்சிப்பாடி சட்டமன்றதொகுதி சார்பாக 13.03.2022 அன்று மாலை 5 மணியளவில் கடலூர் – சிதம்பரம் சாலை *செம்மங்குப்பம் குமரவேல்அண்ணன்தோட்டத்தில்* தொகுதி தலைவர் இராமச்சந்திரன் தலைமையில் கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
தொகுதி செயலாளர் தாஸ் மற்றும் பொருளாளர் திருச்செல்வம் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் கு.சாமிரவி மற்றும் செங்கோலன் ஆகியோர் பொறுப்பாளர்களுக்கு தொகுதியின் வளர்ச்சி குறித்து ஆலோசனைகளை வழங்கினர்.
கூட்டத்தில் கட்சியின் அடுத்தக்கட்ட வளர்ச்சிப்பணிகளைப்
பற்றி ஆலோசிக்கப்பட்டது. வருகிற 27.03.2022 அன்று கடலூர் கிழக்குமாவட்டம் சார்பாக உறுப்பினர் அறிமுக விழா நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.இக்கலந்தாய்வு கூட்டத்தில் கலந்துகொண்ட தொகுதி,ஒன்றிய,நகர மற்றும் கிளைபொறுப்பாளர்கள் அனைவருக்கும் புரட்சிகர வாழ்த்துக்களைத்
தெரிவித்துக்கொள்கிறேன்.
இப்படிக்கு,
தி.சம்பத்குமார்,
குறிஞ்சிப்பாடி தொகுதி செய்திதொடர்பாளர்.

 

Exit mobile version