முகப்பு தலைமைச் செய்திகள்

அறிவிப்பு: பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள்: மலர் வணக்க நிகழ்வு – ஒத்தகடை

1259

அறிவிப்பு: 23-05-2017 வீரமிகு பாட்டனார் பெரும்பிடுகு முத்தரையர் பிறந்தநாள்: மலர் வணக்க நிகழ்வு – திருச்சி ஒத்தகடை | நாம் தமிழர் கட்சி
========================================
வீரமிகு நமது பாட்டனார் பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் 1342ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி 23-05-2017 செவ்வாய்க்கிழமை காலை 11 மணிக்கு, திருச்சி ஒத்தகடையில் அமைந்துள்ள பெரும்பிடுகு முத்தரையர் அவர்களின் திருவுருவச் சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் மாலை அணிவித்து புகழ்வணக்கம் செலுத்துகிறார்.

இந்நிகழ்வில் மாநில, மண்டல, மாவட்ட பொறுப்பாளர்கள் உள்ளிட்ட திருச்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள நாம் தமிழர் கட்சியினர் அனைவரும் திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
044-43804084

Exit mobile version