முகப்பு தலைமைச் செய்திகள்

மாணவர்களின் மரணத்திற்கு நீதிவிசாரணை கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

65

நாம் தமிழர் கட்சியின் இளைஞர் பாசறை மற்றும் மாணவர் பாசறை இணைந்து நடத்தும் மாணவர்களின் மரணத்திற்கு நீதிவிசாரணை கோரி மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

கண்டன உரை: செந்தமிழன் சீமான்

நாள்: இன்று (30-01-2016) மாலை 4 மணி
இடம்: வள்ளுவர் கோட்டம், சென்னை

ஐதராபாத் மாணவர் ரோகித் வெமுலாவின் தற்கொலைக்கு காரணமானவர்களைத் தண்டிக்கக் கோரியும் மற்றும் விழுப்புரம் சித்த மருத்துவ கல்லுரி மாணவிகளின் மர்ம மரணத்திற்கு நீதிவிசாரணை கோரியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

இதில் நாம் தமிழர் கட்சியின் உறுப்பினர்கள், இளைஞர் பாசறை மற்றும் மாணவர் பாசறை உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Exit mobile version