முகப்பு கட்சி செய்திகள்

தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்களின் சிலைக்கு செந்தமிழன் சீமான் அவர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.

168

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்னும் உன்னத லட்சியத்தை தம் இறுதி வாழ்நாள் வரை நெஞ்சினில் ஏந்தி தமிழின விடுதலைக்காகவும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துவரும் நாம் தமிழர் இயக்கத்தின் நிறுவனருமான தமிழர் தந்தை அய்யா சி.பா ஆதித்தனாரின் 30 ஆவது ஆண்டு நினைவு நாளை ஒட்டி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இன்று காலை 24-5-2011, 9.00 மணிக்கு சென்னை எக்மோர் காவல் துறை ஆனையாளர் அலுவலகம் அருகில் உள்ள பெருந்தமிழர் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தினார்.

Exit mobile version