உலக குருதிக்கொடை நாளையொட்டி சென்னை மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடைபெற்ற விருது வழங்கும் நிகழ்ச்சியில் நாம் தமிழர் குருதிக்கொடை பாசறைக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது. விருது மற்றும் பாராட்டுச் சான்றிதழுடன் குருதிக்கொடை பாசறையினர் சீமான் அவர்களைச் சந்தித்து வாழ்த்துப்பெற்றனர்.
இச்சந்திப்பில் குருதிக்கொடை பாசறையின் மாநில ஒருங்கிணைப்பாளர் அரிமா மு.ப .செ.நாதன் மற்றும் சென்னை மாவட்டப் பாசறைப் பொறுப்பாளர்கள் சைதாப்பேட்டை சுகுமார்., மணி, மாதவரம் தொகுதி நித்யானந்தம் ஆகியோரும் உடனிருந்தனர்.
இப்பேரிடர் காலத்தில் நாம் தமிழர் குருதிக்கொடை பாசறை தொடர்ச்சியாக 6500அலகுகளுக்கும் மேலாக வழங்கியுள்ளது. இதில் முதன்மையாக கோவை மாவட்டம் 900+ அலகுகளும் கன்னியாகுமரி மாவட்டம் 600+ அலகுகளும் கொடுத்து மக்களின் உயிர்காக்கும். பணியில் தொடர்ச்சியாக ஈடுபட்டுவருகின்றனர்.