கட்சி செய்திகள்

கிணத்துக்கடவு தொகுதி மொழிப்போர் ஈகியர்களுக்கு வீர வணக்க நிகழ்வு

கிணத்துக்கடவு ஒன்றியத்தில் மொழி காக்க தன்னுயிர் கொடுத்த ஈகியர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது வீர வணக்கம் வீர வணக்கம் 🙏🙏 கலந்துகொண்டவர்கள்: மருத்துவர் சுரேசு ஐயா ம.உமா ஜெகதீஸ். கார்த்திக் ராஜா @SeemanOfficial @ITwingNTK https://t.co/lv8km7KQxx  

மதுராந்தகம் தொகுதி மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வு

25.01.2022 இந்தி திணிப்பை எதிர்த்து தன்னுயிர் ஈந்த மொழிப்போர் ஈகியர்களுக்கு மதுராந்தகம் தொகுதி சார்பாக வீரவணக்கம் செலுத்தப்பட்டது. தொடர்புக்கு: 8148040402  

சிவகாசி தொகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு

சிவகாசி சட்டமன்றத் தொகுதியில் கபசுரக் குடிநீர் வழங்கும் நிகழ்வு ஜனவரி 23, 2022 காலை 7 மணியளவில் நாம் தமிழர் கட்சி சிவகாசி நகரம் சார்பாக நடைபெற்றது. நாம் தமிழர் கட்சி சிவகாசி நகரம்...

திருப்பரங்குன்றம் தொகுதி தமிழர் திருநாள் விழா

தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் தொகுதி சிந்தாமணி பகுதி சார்பில் திருநகரில் அமைந்துள்ள ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் பொங்கல் வைத்து ஆதரவற்ற முதியோர்களுக்கு காலை உணவு வழங்கப்பட்டது

பாளையங்கோட்டை தொகுதி மொழிப்போர் ஈகியர் வீரவணக்க நிகழ்வு

பாளையங்கோட்டை சட்டமன்ற தொகுதி சார்பாக 25/01/2022 செவ்வாய் கிழமையன்று மொழிப் போர் ஈகியர் தினம் எல் எஸ் மஹாலில் வைத்து அனுசரிக்கப்பட்டது. மாவட்ட தலைவர் அண்ணன் ராஜசேகர் மெழுகுவர்த்தி ஏற்றி ஆரம்பித்து வைத்தார். கலந்துக் கொண்ட...

ஆலங்குடி தொகுதி தேர்தல் சிறப்பு கலந்தாய்வு

ஆலங்குடி தொகுதி கீரமங்கலம் பேரூராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தலில் 15 வார்டுகளிலும் நாம்தமிழர்கட்சி சார்பாக வேட்பாளர்கள் "விவசாயி சின்னத்தில்" தனித்து களம் காண்கின்றார்கள். விரைவில் 15 வார்டுகளுக்கான வேட்பாளர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டது.  

திருச்சி மாவட்டம் நாம் தமிழர் தொழிலாளர் சங்க கலந்தாய்வுக் கூட்டம்

திருச்சி மாவட்ட தொழிற்சங்க கட்டமைப்பின் அடுத்த கட்ட வளர்ச்சி குறித்த ஆலோசனைகளை முன்வைத்து பேசிய நாம் தமிழர் தொழிலாளர் நலச்சங்க மாநிலத் தலைவர் இரா.அன்புத் தென்னரசன், மாநிலச் செயலாளர் வழக்கறிஞர் ச.சுரேசு குமார்,...

ஒட்டன்சத்திரம் தொகுதி வேட்பாளர் தேர்வு கலந்தாய்வு கூட்டம்

ஒட்டன்சத்திரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சியின் சார்பாக நடைபெற உள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் நகராட்சி யில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது இதில்...

ஆலங்குடி தொகுதி பேரூராட்சி கலந்தாய்வு

ஆலங்குடி பேரூராட்சி நகர்புற உள்ளாட்சி தேர்தல் சமந்தமாக கலந்தாய்வு நடைபெற்றது. இதில் நாம்தமிழர்கட்சி சார்பாக வேட்பாளர்கள் "விவசாயி சின்னத்தில்" தனித்து களம் காண்கின்றார்கள். விரைவில் வேட்பாளர்கள் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படும்.  

சிவகங்கை தொகுதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கலந்தாய்வு

சிவகங்கை தொகுதியின் நகர் பகுதி உள்ளாட்சி தேர்தல் குறித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.