அறிவிப்பு: அண்ணல் அம்பேத்கர் 64ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – தலைமையகம் | நாம் தமிழர் கட்சி
இந்திய அரசியல் சாசனத்தை வகுத்த பேராசான்! உலகெங்கிலும் வாழும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைக் குறியீடு! இழந்துவிட்ட உரிமைகளைப் பிச்சைக்கேட்டுப் பெறமுடியாது; போராடித்தான் பெற்றாகவேண்டும். கற்பி! ஒன்று சேர்! புரட்சி செய்! என்று போதித்த புரட்சியாளர் அண்ணல் அம்பேத்கர் அவர்களினுடைய 64ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 06-12-2020 ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணியளவில், தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது.
இந்நிகழ்வில் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறவுகளும் பெருந்திரளாகப் பங்கேற்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்.
—
தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084