இலங்கையில் போர்க்குற்ற விசாரணை தேவை – பிரித்தானிய பிரதமர் கமரூன்

15

இலங்கையின் தமிழர்களுக்கு எதிரான இன அழிப்பு போரின்போது நிகழ்ந்த மனித உரிமை மீறல்களை பதிவு செய்துள்ள ஆவணப்படத்தை சனல் 4 ஒளிபரப்பியுள்ள நிலையில், அது குறித்த விசாரணைகளை நடத்த வேண்டும் என்று இங்கிலாந்து பிரதமர் டேவிட் கமரூன் வலியுறுத்தியுள்ளார்.

அவர் இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் கேள்வி நேரத்தின் போது உரையாற்றுகையில், அவர் இலங்கை அரசை வலியுறுத்தியுள்ளார்.

சனல் 4 ஆவணப் படம் குறித்து இங்கிலாந்து வெளியுறவுத்துறை துணை அமைச்சரான அலிஸ்ட்டர் பர்ட் கூறுகையில்,

“இந்த ஆவணப்படத்தை பார்த்து நாங்கள் அதிர்ச்சி அடைந்தோம். அதைப் பார்க்கும் போது, சர்வதேச மனிதாபிமான சட்டங்களை மீறியதற்கான ஆதாரங்கள் இருப்பது போல இருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க, இலங்கை அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் வகையில், சர்வதேச சமூகத்துடன் இணைந்து அனைத்து சாத்தியக்கூறுகளையும் கண்டறிய இங்கிலாந்து அரசு தயாராக இருக்கிறது,” என்றார் அலிஸ்ட்டர் பர்ட்.

முந்தைய செய்திஈழத்தமிழ் அகதிகள் நாடுகடத்தப்படுவது நிறுத்தப்பட வேண்டும்: மனித உரிமைகள் கண்காணிப்பகம்
அடுத்த செய்திகடலூர் மாவட்ட சிதம்பரம் பகுதி நாம் தமிழர் கட்சியின் கலந்தாய்வு கூட்டம்