சுற்றறிக்கை:
மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில் கோயம்புத்தூர் மாவட்ட இணையவழி கலந்தாய்வு
கட்சியின் உட்கட்டமைப்பை வலுபடுத்துவதற்காகவும், அடுத்தக்கட்ட செயற்திட்டங்கள் குறித்து கலந்தாய்வு செய்வதற்காகவும், தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களால் அமைக்கப்பட்ட மாநிலக் கட்டமைப்புக் குழு தலைமையில், வருகின்ற 29-07-2020 மற்றும் 30-07-2020 ஆகிய நாட்களில் கோயம்புத்தூர் மாவட்டத்திற்குட்பட்ட தொகுதிப் பொறுப்பாளர்களுக்கான இணைய வழி கலந்தாய்வு நடைபெறவிருக்கின்றது.
நாள் | நேரம் | கலந்தாய்வு விவரம் | |
29-07-2020 புதன் |
காலை 10:30 மணியளவில் |
மேட்டுப்பாளையம், கவுண்டம்பாளையம் தொகுதிகளுக்கான கலந்தாய்வு | இணையவழி கலந்தாய்வில் பங்கேற்பதற்கான வழிமுறைகள் மற்றும் கடவுச்சொல் தங்கள் தொகுதிச் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்படும். |
பிற்பகல் 12 மணியளவில் |
கோயம்புத்தூர் வடக்கு மற்றும் தெற்கு தொகுதிகளுக்கான கலந்தாய்வு | ||
30-07-2020 வியாழன் |
காலை 10:30 மணியளவில் |
தொண்டாமுத்தூர், கிணத்துக்கடவு தொகுதிகளுக்கான கலந்தாய்வு | |
பிற்பகல் 12 மணியளவில் |
பொள்ளாச்சி, வால்பாறை தொகுதிகளுக்கான கலந்தாய்வு | ||
மாலை 4:30 மணியளவில் |
சிங்காநல்லூர், சூலூர் தொகுதிகளுக்கான கலந்தாய்வு |
தொகுதிக் கலந்தாய்வின் போது மாநிலக் கட்டமைப்புக் குழுவினர் மற்றும் அந்தந்த தொகுதிகளைச் சேர்ந்த அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் தவறாமல் பங்கேற்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
நா.சந்திரசேகரன்
பொதுச்செயலாளர்
நாம் தமிழர் கட்சி