10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில்வாடும் இசுலாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து சிறைவாசிகளின் விடுதலை கோரி அரசின் கவன ஈர்ப்பு தொடர் பொதுக்கூட்டம் – புகைப்படங்கள் இணைப்பு!!

173

இன்று தமிழக மக்கள் ஜனநாயக் கட்சி நடத்திய ‘சிங்கள புத்த இனவாத அரசின் மசூதி இடிக்கும் போக்கினை கண்டித்தும், செப்டம்பர் 15 பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் அனைவரையும் விடுவிக்க வேண்டும்’ என்ற தலைப்பில் மதுரை ஒப்புளா படித்துறையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில், தமிழக மக்கள் ஜனநாயக் கட்சி மாவட்ட தலைவர் மன்னர் மைதீன் தலைமை வகித்தார் அக்கட்சியின் மாநில தலைவர் ஷெரிப், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் பொறியாளர் வெற்றிக்குமரன், நாம் தமிழர் கட்சியின் மதுரை மாவட்ட தலைவர் இராசாமணி, நாம் தமிழர் கட்சியின் மதுரை நகர் மாவட்ட அமைப்பாளர் சிவானந்தம், நாம் தமிழர் கட்சியின் மதுரை புறநகர் மாவட்ட அமைப்பாளர் செங்கணன், சந்திர மோகன். ஆகியோர் பங்கேற்றனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சி மிக்க உரையாற்றினார்.

நன்றி
இராசகுரு
செய்தி பிரிவு மதுரை மாவட்டம்
09791021016

முந்தைய செய்திகோவை இன எழுச்சி பொதுக்கூட்டம்/மூன்றாம் ஆண்டு துவக்க விழா – புகைப்படங்கள் இணைப்பு!!
அடுத்த செய்திதமிழக அரசியல் இதழுக்கு மறுப்பு: செந்தமிழன் சீமான் அறிக்கை