அறிவிப்பு: வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் 222ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை

496

அறிவிப்பு: வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியார் 222ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை | நாம் தமிழர் கட்சி

அடிமைப்பட்டுக்கிடந்த அன்னை நிலத்தை மீட்டெடுக்க வாளும் வேலும் ஏந்தி போர்க்களம் புகுந்த புரட்சிக்காரி! இழந்துவிட்ட நிலத்தை மீண்டும் அடித்து மீட்ட எங்கள் குல மாதரின் குலவிளக்கு! தமிழ்ப் பேரினத்தின் வீரப்பெரும்பாட்டி வேலுநாச்சியாரின் 222ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி 25-12-2018 செவ்வாய்க்கிழமை காலை 10 மணியளவில் நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகமான இராவணன் குடிலில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் மலர்வணக்க நிகழ்வு நடைபெறவிருக்கிறது.

இடம்: இராவணன் குடில், எண்: 8, மருத்துவமனைச் சாலை, செந்தில்நகர், சின்னப்போரூர், சென்னை – 116
https://goo.gl/maps/FgShC6MqpEG2

அவ்வயம் நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும் உறுப்பினர்களும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி

முந்தைய செய்திஅறிவிப்பு: ஐயா பெரியார் 45ஆம் ஆண்டு நினைவுநாள் மலர்வணக்க நிகழ்வு – சென்னை
அடுத்த செய்திஅறிவிப்பு: தகவல் தொழில்நுட்பப் பணியாளர்கள் பிரிவு தொடக்கவிழா மற்றும் கலந்தாய்வு – சென்னை