வவுனியாவில் கூட்டமைப்பு வேட்பாளர்கள் உள்ளிட்ட 50பேர் கைது!

18

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரச்சாரம் வவுனியா நகர்ப்பகுதியில் இடம்பெற்றுள்ளபோது வேட்பாளர்கள் உள்ளிட்ட 50 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள்.

இதில் பிரதேச இளைஞர்கள் ஆதரவாளர்கள் இணைந்து மேற்படி தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்தார். இந்நிலையில் இன்றுமாலை தேர்தல் பிரசார நடவடிக்கைகள் இடம்பெற்றுக் கொண்டிருந்தவேளையில் அங்கு வந்த வவுனியா காவல்துறையினர் வேட்பாளர் க.சந்திரகுலசிங்கம் (மோகன்) உள்ளிட்ட ஐம்பதுக்கும் மேற்பட்டவர்களை கைதுசெய்து வவுனியா பொலீஸ் நிலையத்தில் தடுத்து வைத்திருந்தனர்.

சுமார் ஒன்றரை மணி நேரத்தின் பின்னர் வேட்பாளர் க.சந்திரகுலசிங்கம்(மோகன்) உள்ளிட்ட அனைவரையும் அவர்களின் கையெழுத்தைப் பெற்று விடுதலை செய்துள்ளனர். எனினும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வீட்டுச் சின்னம் தாங்கிய வாகனமும் அதன் சாரதியான தனராஜ் என்பவரும் இதுவரையில் விடுவிக்கப்படவில்லை.

சாரதியையும் வாகனத்தையும் நாளை வவுனியா நீதிமன்றில் ஒப்படைக்க காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருவதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.இந்த விவாகாரம் தொடர்பில் தேர்தல்கள் கண்காணிப்பு குழுக்களிடமும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

முந்தைய செய்திதமிழர் தாயகத்தில் தமிழ் பேசும் மக்களின் இருப்பை தக்கவைத்துக் கொள்ள வேண்டும்
அடுத்த செய்திதமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க கோரி சாகும்வரையில் உண்ணாவிரம் -சட்டவாளர் அங்கயற்கண்ணி!