கடந்த (12-06-2019) பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ப. அருள் அவர்களை சென்னையிலுள்ள அறிவுரைக் கழகத்தில் ஆஜர் படுத்த திருச்சி சிறையிலிருந்து போலீசார் அழைத்து வந்தனர். அருடைய குடும்பத்தார் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களுடனும் சந்தித்து பேசினார். உரிய சட்ட ஆலோசனைகளை மூத்த வழக்கறிஞர்கள் திரு.ராவணன், திரு. சுரேஷ், திரு. சங்கர் ஆகியோர் வழங்கினார்கள் உடன் திருச்சி மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் இரா. பிரபு, வழக்கறிஞர் அன்பு மற்றும் பெரம்பலூர் மாவட்ட தலைவர் ஆரா. முத்துராஜ் மற்றும் இணைச்செயலாளர் நெ. அருண்குமார் வந்திருந்தனர்.