வருகின்ற 29-4-2011 அன்று கும்பகோணம் நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.

300

ஐ.நா.போர் வல்லுநர் குழு அளித்துள்ள சிங்கள பேரினவாதி இராசபக்சேவினை தண்டிக்க கோரியும், இலங்கைக்கு துணைப் போகும் இந்தியாவை கண்டித்தும் 29-04-2011 அன்று கும்பகோணத்தில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக மாபெரும் கண்டன ஆர்ப்பார்ட்டம் நடைபெற உள்ளது. இந்த கண்டன ஆர்ப்பார்ட்டத்திற்கு மாவட்ட அமைப்பாளர்கள் வழக்கறிஞர்.வீரக்குமரன் மற்றும் சதா முத்துகிருஷ்ணன் தலைமை வகிக்கிறார்கள்,மாநில ஒருங்கிணைப்பாளர். வழக்கறிஞர். அ.நல்லதுரை, மாநில இளைஞர் பாசறை அமைப்பாளர் மணி செந்தில் என்ற திலீபன் சிறப்புரை ஆற்றுகின்றனர். நகர அமைப்பாளர் ரகமதுல்லா என்ற தமிழ்வேந்தன்,மாவட்ட துணை அமைப்பாளர் நாதன் உள்ளீட்ட தஞ்சை மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடுகளை விரிவான முறையில் செய்து வருகின்றனர்.

முந்தைய செய்திநாம் தமிழர் கனடா, அனைத்து தமிழ் அமைப்புகளையும் ஒன்றிணைத்துமுன்னெடுக்கும் பேரெழுச்சி ஒன்று கூடல்.
அடுத்த செய்திகரூர் தாலுக்கா அலுவலகம் முன்பு ராஜபக்சே சகோதர்களை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த கூறி நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்.