ராஜபக்சேவை கைது செய்ய வலியுறுத்தி நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கட்சியினர் நூற்றுகணக்கானோர் பங்கேற்ப்பு

30

பிரிட்டன் சென்றுள்ள சிங்கள இனவெறி அதிபர் ராஜபக்சே போற்குற்றவாளியை கைது செய்ய வலியுறுத்தி சென்னை நாம் தமிழர் கட்சியினர் சார்பாக சென்னை சாஸ்த்திரி பவன் எதிரில் உள்ள பிரிட்டிஷ் தூதரகத்தை நாம் தமிழர் கட்சியினை சார்ந்த நூற்றுக்கும் அதிகமானோர் கலந்து கொண்டனர். போராட்டத்தில் மத்திய சென்னை பொருப்பாளர் அதியமான்,வட சென்னை பொறுப்பாளர் அமுதாநம்பி, தென் சென்னை பொருப்பாளர் தங்கராசு, அன்புதென்னரசு உள்ளிட்ட நாம் தமிழர் கட்சியின் ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டனர். ராஜபக்சேவிற்கு எதிராகவும் பிரிட்டன் அரசு ராஜபக்சேவை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.

முந்தைய செய்திஈரோடு மாவட்ட நாம் தமிழர் கட்சியினர் சார்பாக நடைபெற்ற மாவீரர் தின நிகழ்வு.
அடுத்த செய்திபோர்க்குற்றவாளி ராஜபக்சேவை கைது செய்ய கோரி மனு கொடுக்க சென்ற நாம் தமிழர் கட்சியினர் நூற்றுக்கும் மேற்ப்பட்டோர் கைது