“மலையாள மனோரமா” அரங்கினை வெளியேற்ற கோரியும, காலச்சுவடு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடத்திய தோழர்களுக்கு நாம் தமிழர் கட்சியின் பாராட்டுக்கள்!!

36

முல்லைப்பெரியாறு அணையைப் பற்றிய தவறான செய்திகளை காலங்காலமாக வெளியிட்டு வரும் “மலையாள மனோரமா” வின் நூல் அரங்கினை சென்னை புத்தகக் கண்காட்சியை விட்டு வெளியேற்ற கோரியும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தினை நெடுங்காலமாக கொச்சைப்படுத்தி எழுதி வரும் காலச்சுவடின் நூல் வெளியிட்டு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் போராட்டம் நடத்திய மே 17 இயக்கத் தோழர்களுக்கு நாம் தமிழர் கட்சி மனமார்ந்த வாழ்த்துக்களையும் பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறது.

சென்னை புத்தகக் கண்காட்சியில், முல்லைப்பெரியாறு அணையைப் பற்றிய தவறான செய்திகளை முதன்முதலில் 70களில் வெளியிட்டு மலையாளிகளை தமிழர் அணைக்கு எதிராக திசைதிருப்பிய “மலையாள மனோரமா” வின் நூல் அரங்கினை புத்தகக் கண்காட்சியை விட்டு வெளியேற்ற கோரி போராட்டம்.

காலச்சுவடின் நூல் வெளியிட்டு விழாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்:

முந்தைய செய்திடாம் 999 மத்திய அரசு நிலைப்பாடு கண்டனத்திற்குரியது – சீமான் அறிக்கை
அடுத்த செய்திஉரிமைகளை மீட்க உறுதியேற்றுப் பொங்கலிடுவோம்: நாம் தமிழர் கட்சி