மார்ச் மாதத்திற்குள் பரிந்துரைகள் அமுல்படுத்தபடாவிடின் வலுவான நடவடிக்கை – நவநீதம்பிள்ளை

25


ஐக்கிய நாடுகளின் பேரவைக் கூட்டத்தில் உரையாற்றிய நவனீதம்பிள்ளை இலங்கை மீதான சர்வதேச மனிதவுரிமைகள் தொடர்பான விசாரணைகள் பற்றி வாய்மூல அறிக்கை, ஜெனீவாவுக்கான இலங்கையின் வதிவிடப் பிரதிநிதி ரவிநாத் ஆரியசிங்கவினால் ஆட்சேபிக்கப்பட்டிருந்தது. இந்த ஆட்சேபனை தொடர்பில் அவுஸ்திரேலிய வானொலியின் ஊடகவிலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே நவனீதம்பிள்ளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரை அமுலாக்கல் தொடர்பாக வலியுறுத்தியிருந்தார். இலங்கை அரசாங்கத்தினால் ஸ்தாபிக்கப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழு என்பது அவர்களினாலேயே ஏற்படுத்தப்பட்டது. அந்த ஆணைக்குழுவினால் பல பரிந்துரைகள் செய்யப்பட்டுள்ளன. அவர்களின் பரிந்துரைகளை அமுல்படுத்தவில்லை. அதன் காரணமாகவே, அது அமுல்படுத்தப்படவில்லை என்று நான் சபையின் சபையின் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளேன்.
கற்றுக்கொண்ட பாடங்கள் ஆணைக்குழுவின் அறிக்கை மிகவும் குறுகிய தன்மையைக் கொண்டுள்ளதுடன், அது எதிர்ப்பார்ப்புக்களை பூர்த்தி செய்வதாக இல்லை. அவர்களது பரிந்துரைகள் கூட அமுல்படுத்தப்படவில்லை. இந்தநிலையில், எதிர்வரும் மார்ச் மாதம் எனது மேலதிக அறிக்கை சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்படாத பட்சத்தில் மனிதவுரிமைகள் சபை சர்வதேச விசாரணைகள் குறித்து கூடிய கவனம் செலுத்த வேண்டும் என நவனீதம்பிள்ளை தமது செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.

முந்தைய செய்திஇந்திய அரசே! அணுஉலையை இழுத்து மூடு! கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் நாம் தமிழர் கட்சியின் மாபெரும் ஆர்ப்பாட்டம்
அடுத்த செய்திகூடங்குளம் போராளிகள் மீது போடப்பட்ட பொய் வழக்குகளை திரும்பபெற வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்- கோவை மாவட்டம்