மழலையர் பாசறை தொடக்கப் பொதுக்கூட்டம் – பாபநாசம் | சீமான் எழுச்சியுரை

434

செய்தி: மழலையர் பாசறை தொடக்கப் பொதுக்கூட்டம் – பாபநாசம் | சீமான் எழுச்சியுரை | நாம் தமிழர் கட்சி

நாம் தமிழர் கட்சியின் மழலையர் பாசறை  தொடக்க விழாப் பொதுக்கூட்டம் 09-09-2017 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்றது. இதில் நாம் தமிழர் கட்சியின் மழலையர் பாசறையைச் சேர்ந்த இளம் புரட்சியாளர்களின் எழுச்சியுரைகள் இடம்பெற்றன. அவை அடுத்த தலைமுறைக்கான அரசியலை அடுத்த கட்டத்திற்கு நகர்த்தி செல்லும் என்பதில் ஐயமில்லை.

இறுதியாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் சிறப்புரையாற்றினார்.

நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, ஒன்றியம் உள்ளிட்ட அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் திரளாகப் பங்கேற்று மழலையரின் அரசியல் பேச்சுக்களை ஆர்வமாக கேட்டனர்.

09-09-2017 மழலையர் பாசறை தொடக்கப் பொதுக்கூட்டம் – சீமான் எழுச்சியுரை

[WRGF id=52793]

முந்தைய செய்திஅறிவிப்பு: ‘சமூகநீதிப் போராளி’ இமானுவேல் சேகரனார் 60ஆம் ஆண்டு நினைவுநாள் – மலர்வணக்க நிகழ்வு (சென்னை)
அடுத்த செய்தி‘சமூகநீதிப் போராளி’ இமானுவேல் சேகரனார் 60ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்