[2-ஆம் இணைப்பு காணொளி, படங்கள் இணைப்பு] சென்னை மாவட்டத்திற்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற காங்கிரசுக்கு எதிரான தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம்.

29

காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நாம் தமிழர் கட்சி மேற்கொண்டு வரும் தேர்தல் பரப்புரையில் நேற்று சென்னைக்கு உட்பட்ட சட்டமன்ற தொகுதிகளில் பிரச்சாரம் நடைபெற்றது. காங்கிரஸ் கட்சியை இந்த மண்ணில் அழிக்க வேண்டும் என்ற முனைப்போடு தமிழகம் முழுவது செந்தமிழன் சீமான் அவர்கள் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.இந்நிலையில் நேற்று சென்னை அரும்பாக்கம்,திரு.வி.க நகர் ,மயிலாப்பூர்,ராயபுரம்,மற்றும் சென்னை தி.நகரில் நாம் தமிழர் கட்சியின் பிரச்சார பொதுகூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் செந்தமிழன் சீமான் அவர்கள் கலந்து கொண்டு பேசியதாவது:

ஈழத்தில் நடைபெற்ற இறுதிகட்ட போரின் போது சகோதரி இசைபிரியாவை கொடூரமாக கொன்றொழித்த காட்சியை இங்கிலாந்தின் சானல் 4 தொலைகாட்சி வெளியிட்டபோது அதைப் பார்த்து அதிர்ந்து அனைத்துலக நாடுகளும் ராஜபக்சேவிற்கு கண்டனம் தெரிவித்த போதும், எமது தாய்த் தமிழ் உறவுகள் தங்களது தந்தையர் நாடாக நேசித்த இந்திய அரசு ஒரு கண்டனத்தை கூட தெரிவிக்காமல் மவுனமாக இருந்தது, ஏனென்றால் போரை அங்கு நடத்தியது இந்திய காங்கிரஸ் அரசு. காங்கிரஸ் கட்சி இந்த மண்ணில் இருக்கிறவரைக்கும் இந்தியா ஒரு போதும் வல்லரசாக முடியாது. ஊழல் செய்வதில் தான் இந்தியா அரசு முதலிடத்தில் உள்ளது.
500கும் அதிகமான தமிழக மீனவர்களை சிங்கள கடற்படை ராணுவம் சுட்டுகொன்றபோதும் கூட தமிழர்களின் நலனில் அக்கறை இல்லாத காங்கிரஸ் கட்சி இதுவரை பாதிக்கப்பட்ட ஒரு குடும்பத்தையாவது பார்த்து ஆறுதல் கூறியதுண்டா. தமிழர்களின் கனவு தேசமான தமிழீழத்தில் நடைபெற்ற போரில் இலட்சக்கணக்கான அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர், அதற்கு இரண்டு கரமும் கொடுத்து உதவிய காங்கிரஸ் கட்சியை தமிழர்களின் தாயக நிலமான தமிழகத்தில் அக்கட்சியை தமிழர்கள் விரட்டியடித்தார்கள் என்று வரலாற்றில் வரவேண்டும். எனவே காங்கிரசின் கை சின்னத்தை பார்த்தால் கண்ணை மூடி கொண்டு அதை எதிர்த்து நிற்கும் சின்னத்தில் வாக்களியுங்கள் என்று தெரிவித்தார்.

தமிழருவி மணியன் அவர்கள் கலந்து கொண்டு பேசும்போது தந்தை பெரியாரின் வாரிசு,அண்ணாவின் தம்பி என்று தன்னை கூறிக்கொள்ளும் கருணாநிதி அவர்கள் காங்கிரஸ் கட்சியை இந்த மண்ணில் வீழ்த்த வேண்டும் என்ற அவர்களின் இலட்சியத்தை புறம தள்ளிவிட்டு ஆட்சியை மட்டும் இந்த வயதிலும் பிடிக்க பார்க்கிறார். தமிழர்களின் பிரச்சனைக்காக ஒரு முறை கூட டெல்லி செல்லாத கருணாநிதி அவர்கள் தன வாரிசுகளுக்கு பதவி வாங்கி தருவதற்கு மட்டும்தான் டெல்லி சென்றுள்ளார். தமிழனத்தை பற்றி பேசும் நெடுமாறன்,வைகோ,சீமான் போன்றவற்களை கைது செய்து சிறையில் அடைக்கும் நீங்கள் எப்படி தமிழினத் தலைவனாக இருக்க முடியும் என்று கேள்வி எழுப்பினார்.

இக்கூட்டத்தில் தமிழ் முழக்கம் சாகுல் அமீது,வழக்கறிஞர் சிவக்குமார்,மதுரை வெற்றிக்குமரன்,புகழேந்தி தங்கராசு, தடா ராசா,அய்யநாதன், பேராவூரணி திலீபன்,புதுகோட்டை ஜெயசீலன், ஆவல் கணேசன்,பாலமுரளி வர்மன்,அமுதா நம்பி,வழக்கறிஞர் கயல்விழி மற்றும் பலர் கலந்துகொண்டனர். ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சாலையின் இரு புறமும் நின்று செந்தமிழன் சீமான் அவர்களின் வீரம் செறிந்த உரையை கேட்டனர். தி.நகரில் நடைபெற்ற பொதுக்கூட்டம் நாம் தமிழர் இணையத்தில் நேரலை செய்யப்பட்டது.

முந்தைய செய்திகலங்கடிக்கும் நோட்டீஸ்… காலியாகிறது காங்கிரஸ்..? – தினமலர்
அடுத்த செய்திதிருவாரூர் மாவட்ட நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தென்றல் சந்திரசேகரின் மகள் அகால மரணமடைந்தார் – நாம் தமிழர் கட்சி இரங்கல்.