காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பாமக-வின் பொது வேலைநிறுத்தத்திற்கு முழு ஆதரவு – சீமான் அறிவிப்பு

150

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பாமக முன்னெடுக்கும் பொது வேலைநிறுத்தத்திற்கு நாம் தமிழர் கட்சி முழு ஆதரவு – சீமான் அறிவிப்பு | நாம் தமிழர் கட்சி

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக்கோரி பாமக முன்னெடுக்கும் பொது வேலைநிறுத்தத்திற்கு முழு ஆதரவு தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தப் பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காமல் துரோகமிழைத்தும், திட்டமிட்டு கர்நாடகத் தேர்தலுக்காகக் கள்ளமௌனம் சாதித்து வரும் மத்திய அரசைக் கண்டித்தும், உடனடியாக அமைக்க வலியுறுத்தியும் வரும் ஏப்ரல்-11ம் தேதி பாட்டாளி மக்கள் கட்சி தலைமையிலான காவிரி உரிமை பாதுகாப்புக் கூட்டமைப்பு அழைப்புவிடுத்திருக்கும் பொது வேலைநிறுத்தத்தில் நாம் தமிழர் கட்சி முழுமையாகப் பங்கேற்கிறது. நாம் தமிழர் கட்சியின் அனைத்துநிலைப் பொறுப்பாளர்களும், அனைத்துப் பாசறைகளும் இந்தப் பொது வேலைநிறுத்தத்தில் பங்குபெற வேண்டும் என்று உரிமையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

காவிரி நமது உரிமை. உரிமையைப் பெறும் வரை தொடர்ந்து போராடுவோம். தமிழர்கள் இணைந்து போராடுவோம்.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

முந்தைய செய்திஅறிவிப்பு: காவிரி உரிமை மீட்புப் போராட்ட அறிவிப்புகள் குறித்து பத்திரிகையாளர் சந்திப்பு | பெ. மணியரசன் – சீமான் – தமிமுன் அன்சாரி பங்கேற்பு
அடுத்த செய்திஅறிவிப்பு: சென்னை IPL போட்டி புறக்கணிப்பு – தமிழ்நாட்டுக் கொடியேந்தி மாபெரும் முற்றுகைப் போராட்டம் | காவிரி உரிமை மீட்புக் குழு