பர்மா இனப்படுகொலையைக் கண்டித்து வள்ளுவர்கோட்டத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது

34

பர்மாவில் நடக்கும் இனப்படுகொலையைக் கண்டித்தும், பெரியார்-அம்பேத்கர் வட்டத்தின் மீதான தடை நீக்கக்கோரியும் சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் எழுச்சியுரையாற்றினார். மேலும், இதில் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன், தமிழக மக்கள் ஜனநாயகக்கட்சியின் தலைவர் கே.எம்.ஷெரிப், ஊடகவியலாளர் டி.எஸ்.எஸ்.மணி, ஆதித்தமிழர் விடுதலை இயக்கத்தின் பொதுச்செயலாளர் வினோத், மள்ளர் மீட்புக்களம் செந்தில் மள்ளர், இன அழிப்புக்கு எதிரான இசுலாமிய இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் உமர்கயான் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முந்தைய செய்திமியான்மர் முஸ்லிம்கள் மீதான தாக்குதலைக் கண்டித்து வரும் 5-ம் தேதி சென்னையில் ஆர்ப்பாட்டம்-நாம் தமிழர் கட்சி அறிவிப்பு
அடுத்த செய்திகோவையில் வேட்பாளரை அறிவித்து தேர்தல் பரப்புரையைத் தொடங்கினார் சீமான்.