தமிழ் நாடு தமிழருக்கே எனச் சூளுரைத்த தந்தை பெரியார் !பெண்ணுரிமை போற்றிய முதல் பெண்ணியவாதி !சாதி,சமயச் சாக்கடைகளைச் சாடிய சமூக விஞ்ஞானி !தந்தை பெரியாரின் 37 -வது நினைவு தினமான 24-12 -10 அன்றுவிருதுநகர் மாவட்ட நாம் தமிழர் இயக்கம் சார்பாக தந்தை பெரியாருக்குமாலை அணிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் விருதுநகர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் வை.தமிழினி,கண்ணன், முருகன்,கனகராசு,செல்வா, அழகுவேந்தன்,இராவணன்,பிடல் சே பிரபாகரன், வழக்குரைஞர் செயராசு,சக்திவேல், அருகன்குளம் பிச்சையாமற்றும் தமிழின உணர்வாளர்கள் பெருந்தமிழர்.பன்னீர் செல்வம்,பெருந்தமிழர் கோவிந்தராசு,பெருந்தமிழர் ராசேந்திரன் மற்றும் ராமராசு ஆகியோர் கலந்து கொண்டனர்.