[படங்கள் இணைப்பு] மதுரை மாவட்ட நாம் தமிழர் கட்சி நடத்திய பெரியார் மற்றும் எம்.ஜி.ஆர் அவர்களின் நினைவு நாள் நிகழ்வு.

52

நம் இன விடுதலைக்காக போராடிய தந்தை பெரியார் அவர்களின் நினைவையும் ,ஈழ விடுதலைக்காக நிதி கொடுத்து உதவி, தனித்தமிழீழத்தை ஆதரித்த புரட்சித்தலைவர் எம். ஜி. ஆர் அவர்களது நினைவையும் போற்றும் விதமாக 24.12.2010 அன்று காலை இவர்களது சிலைக்கு மதுரை மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக பேரணியாக சென்று மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாநில ஒருங்கிணைப்பாளர் வெற்றிக்குமரன் தலைமையில் புலவர் தமிழ்கூத்தன், சிவானந்தன், செங்கண்ணன், திருப்பரங்குன்றம் செந்தில்,நாகராசு, மதிமாறன்,அரசகுமாரன், அரசகுரு,  உள்ளிட்ட ஏராளமான தமிழ் உறவுகளும், நாம் தமிழர் கட்சியின் செயல் வீரர்களும் கலந்து கொண்டனர்.

பொறியாளர் செ. வெற்றிக்குமரன்

மாநில ஒருங்கிணைப்பாளர்

நாம் தமிழர் கட்சி .

அலைபேசி : 9043035040


முந்தைய செய்திகோவை புறநகரில் இனி இரவு 12 மணிவரை உணவகங்கள் இயங்க அனுமதி – நாம் தமிழர் கட்சியினரின் முயற்சி வெற்றி.
அடுத்த செய்திகேணல் கிட்டு