பகரைன் – குருதி கொடை முகாம்

284

செந்தமிழர் பாசறை பகரைன் மருத்துவ பாசறை நடத்திய 3ஆம் ஆண்டு குருதிக் கொடை முகாம் நேற்று நவம்பர் 27ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை 6:30 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை நடைப் பெற்றது.

மொத்தம் 75 உறவுகளுகள் கலந்து கொண்டு 65 உறவுகள் தங்களின் விலைமதிக்க முடியாத குருதியை தானமாக கொடுத்தனர்.

குருதிக் கொடை முகாமில் கலந்து கொண்ட அனைத்து பொறுப்பாளர்களுக்கும், குருதி தானம் செய்த அனைத்து உறவுகளுக்கும் செந்தமிழர் பாசறை பகரைன் நன்றிகளையும் புரட்சி வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறது.

முந்தைய செய்திஆத்தூர் தொகுதி – குருதிக்கொடை முகாம் ஆத்தூர் தொகுதி
அடுத்த செய்திநெய்வேலி தொகுதி – மாவீரர் நாள் நிகழ்வு