பழனி பேருந்து நிலையம் அருகே உள்ள மயில் ரவுண்டானாவில் நாம் தமிழர் கட்சியின் சார்பாக தனியார் நிதி நிறுவனங்கள் கொரனா தொற்று காரணமாக வேலை இல்லாமல் வீட்டில் முடங்கிக் கிடக்கும் மக்களை சந்தித்து உடனடியாக பணம் கட்ட வேண்டும் இல்லையென்றால் வட்டி அதிகமாக கணக்கிடப்பட்டு அதிகமான தொகை கட்ட நேரிடும் என்று மிரட்டி வருகின்றனர் இதனை கண்டிக்கும் விதமாக நாம் தமிழர் கட்சியின் சார்பாக தமிழக அரசு உடனடியாக தவறு செய்யும் நிதி நிறுவனங்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.