நடிகர் திலகம் சிவாஜி கணேசன் 15 ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் புகழ்வணக்கம்

581

உலகத்தமிழ்ப் பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம் நடிகர் திலகம் ஐயா சிவாஜி கணேசன் அவர்களுடைய 15ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று (21-07-2016) காலை 11 மணிக்கு, சென்னை கடற்கரை சாலையிலுள்ள அவரது திருவுருவச்சிலைக்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் மாலை அணிவித்து மலர்வணக்கம் செலுத்தினார்.

sivaji-ganesan-memorial-day-2016-seemanIMG_4268sivaji-ganesan-memorial-day-2016-seemanIMG_4269sivaji-ganesan-memorial-day-2016-seemanIMG_4270sivaji-ganesan-memorial-day-2016-seemanIMG_4274sivaji-ganesan-memorial-day-2016-seemanIMG_4280sivaji-ganesan-memorial-day-2016-seemanIMG_4284sivaji-ganesan-memorial-day-2016-seemanIMG_4307sivaji-ganesan-memorial-day-2016-seemanIMG_42801
இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது,

தன் அளப்பறிய கலைத்திறமையால் சிவனை, கண்ணனை, கந்தனை, கர்ணனை, திருமாலை, அப்பர் பெருமானை, கப்பலோட்டிய தமிழனை, கட்டப்பொம்மனை நம் கண்முன்னே நிறுத்தியவர் ஐயா சிவாஜி கணேசன்;

மன்னனுக்கு ஒருநடை, அண்ணனுக்கு ஒருநடை, ஏர் உழவனுக்கு ஒருநடை, பெருங்கிழவனுக்கும் ஒருநடை, மீனவனுக்கு ஒருநடை, அன்பு மாணவனுக்கு ஒருநடை, கள்வனுக்கு ஒருநடை, கடுங்காவலனுக்கும் ஒருநடை, கவிஞருக்கு ஒருநடை, நற்காதலனுக்கு ஒருநடை – என்று தன் தனித்திறன்மிக்க நடிப்பாற்றலால் நாட்டுமக்கள் உள்ளத்திலும், இல்லத்திலும் நீண்டப் புகழோடு நிலைத்து வாழ்பவர்;

சிம்மக்குரலால், தன் சின்ன நாவசைவால் நம் தமிழர் நாட்டிற்கு நல்லதமிழ் உச்சரிப்பைக் கற்றுக்கொடுத்த கலையுலகப் பேராசான்.
உலகத்தமிழ்ப்பேரினத்தின் பெருமைமிகு கலை அடையாளம் நமது ஐயா நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்களுடைய 15 ஆம் ஆண்டு நினைவுநாளான இன்று (21-07-2016), அந்த ஒப்பற்ற கலை உலக மேதைக்கு நம் புகழ்வணக்கத்தைச் செலுத்துவோம். நாம் தமிழர்!

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

முந்தைய செய்திபட்டயக்கணக்காளர் தேர்வில் முதலிடம்பெற்ற ஸ்ரீ ராமுக்கு மாணவர் பாசறை வாழ்த்து!
அடுத்த செய்தி21-07-2016 தினம் ஒரு சிந்தனை – 46 | செந்தமிழன் சீமான்