தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்

69

செய்திக்குறிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு – தலைமையகம் (சென்னை) | நாம் தமிழர் கட்சி

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலையை மூடக்கோரி நூறு நாட்களுக்கும் மேலாக அறவழியில் போராடிய அப்பாவி பொதுமக்களை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்திய அரசப் பயங்கரவாதம் நடைபெற்று ஓராண்டு முடிவடைந்தபோதும் படுகொலையுண்டவர்களுக்கு நீதி கிடைக்காத சோகம் தொடர்கிறது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல்நிகழ்வு நாம் தமிழர் கட்சி சார்பாக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தலைமையில் இன்று 22-05-2019 புதன்கிழமை காலை 11 மணியளவில் சென்னையில் உள்ள *தலைமையகத்தில்* சுடர் வணக்கம் மற்றும் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.


தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திஅறிவிப்பு:- மே 22, தூத்துக்குடி ஸ்டெர்லைட் தாமிர ஆலை எதிர்ப்புப் போராட்ட ஈகியர் முதலாமாண்டு நினைவேந்தல் நிகழ்வு
அடுத்த செய்திநாடாளுமன்றத் தேர்தல்-2019ல் தொகுதிவாரியாக பெற்ற வாக்குகள் விவரம்: