அறிவிப்பு: தமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் – பொதுக்கூட்டம் | துறையூர்

31

அறிவிப்பு: தமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் – மாபெரும் பொதுக்கூட்டம் | துறையூர் சட்டமன்றத் தொகுதி | நாம் தமிழர் கட்சி

தொடர்ச்சியாக தமிழ்த்தேசிய இனமக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்து நாம் தமிழர் கட்சி நடத்தும் மாபெரும் பொதுக்கூட்டம் 24-06-2017 சனிக்கிழமை மாலை 5 மணியளவில் துறையூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட பாலக்கரையில் நடைபெறவிருக்கிறது. இதில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் கண்டனவுரையாற்றுகிறார்.

அதுசமயம் நாம் தமிழர் கட்சியின் மாநில, மண்டல, மாவட்ட, தொகுதி, வட்டம், ஒன்றியம், கிளை உள்ளிட்ட அனைத்துநிலை பொறுப்பாளர்கள் மற்றும் ஆன்றோர் பாசறை, இளைஞர் பாசறை, மாணவர் பாசறை, வீரத்தமிழர் முன்னணி, மகளீர் பாசறை, உழவர் பாசறை, கையூட்டு ஊழல் ஒழிப்பு பாசறை, மீனவர் பாசறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு பாசறை, குருதிக்கொடை பாசறை, வழக்கறிஞர் பாசறை, மருத்துவர் பாசறை உள்ளிட்ட அனைத்து பாசறைகளின் அனைத்துநிலை பொறுப்பாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாகப் பங்கேற்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இடம்: பிரசன்னா அரங்கம் அருகில். பாலக்கரை, துறையூர்

தொடர்புக்கு: +91-9962749628 / 9443794834
https://goo.gl/kHwFGA

தலைமை அலுவலகச் செய்திக்குறிப்பு
நாம் தமிழர் கட்சி
+044 – 4380 4084

முந்தைய செய்திநீதியரசர் கர்ணன் விவகாரத்தில் மத்திய அரசு தலையிட வேண்டும் : சீமான் வலியுறுத்தல்
அடுத்த செய்திஇந்தித்திணிப்பு: இந்திய ஒருமைப்பாட்டுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலைத் தரும் – சீமான் எச்சரிக்கை