[படங்கள் இணைப்பு] புதுவையில் நடைபெற்ற நாம் தமிழர் கட்சியின் மாநில கலந்தாய்வு கூட்டம்.

73

நாம் தமிழர் கட்சியின் புதுவை மாநில கலந்தாய்வுக் கூட்டம் செந்தமிழன் சீமான் அவர்கள் தலைமையில் புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் சிவா- ருக்மணி மகாலில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் புதுவை, காரைக்கால், மற்றும் தமிழக பகுதிகளை சார்ந்த நூற்றுக்கும் மேற்ப்பட்ட தமிழுணர்வாளர்கள் கலந்து கொண்டனர். புதுவை மாநில நாம் தமிழர் கட்சியினர் ஏற்பாடு  செய்திருந்த பதாகைகள் மற்றும் சுவரொட்டிகள் அனைத்தும் அனைவரும் வியக்கும் வண்ணம் சிறப்பாக செய்யப்பட்டிருந்தது.இக்கூட்டத்தில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் சிறப்புரையாற்றினார். அவரது பேச்சை கேட்க ஏராளமானோர் அரங்கத்தின் உள்ளேயும் வெளியேயும் திரண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

முந்தைய செய்தி10-3-2011 அன்று வட சென்னை மாவட்டம் ஆர்.கே.நகர் பகுதியில் நாம் தமிழர் கட்சி அலுவலகம் திறப்பு விழா மற்றும் கொள்கை விளக்க பொதுக்கூட்டம்.
அடுத்த செய்திதிருவண்ணாமலை மாவட்ட நாம் தமிழர் கடசியின் செயல்வீரர்கள் கூட்டம் 13-3-2011 அன்று நடைபெறவுள்ளது.