தியாகி திலீபன் அவர்களின் நினைவாக யேர்மனி பேர்லின் நகரில் 4 காவது தடவையாக நடைபெற்ற உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டி

16

தமிழீழ விடுதலைக்காக சாகும் வரை உண்ணா நோன்பு இருந்து தனது இன்னுயரை ஈகம் செய்த தியாகி திலீபன் அவர்களின் நினைவாக 4 காவது தடவையாக யேர்மனி பேர்லின் நகரில்  உள்ளரங்க உதைப்பந்தாட்ட போட்டி நடைபெற்றது .

தியாகி திலீபன் அவர்களின் திருவுருவப் படத்திற்கு ஈகைச்சுடர் ஏற்றப்பட்டு தொடர்ந்து அகவணக்கம் செலுத்தப்பட்டது .

இவ்வாண்டு உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில்  மேற்பிரிவுக்கான உள்லூர் 8 கழகங்களும் , 15 வயதுக்கு உட்பட்டோர்  3 கழகங்களும், 13 வயதுக்கு உட்பட்டோர் 4 கழகங்களும்           பங்குபற்றினர்.

சிறப்பாக நடைபெற்ற இப் போட்டியில் பல விளையாட்டு வீரர்கள் மிக திறமை கொண்டவர்களாக காணப்பட்டார்கள் . இவர்களை உலகளாவிய ரீதியில் சென்ற ஆண்டு  உருவாக்கப்பட்ட தமிழீழம் தேசிய அணிக்கு பரிந்துரைக்கப் படும் என முடிவெடுக்கப்பட்டது .

தியாகி திலீபன் அவர்களின் நினைவாக நடைபெற்ற உள்ளரங்க உதைப்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் வெற்றி பெற்ற கழகங்களுக்கு வெற்றிக் கிண்ணங்கள் வழங்கப்பட்டு சிறப்பாக இப் போட்டி நிறைவு பெற்றது .

 

முந்தைய செய்திஅணுஉலை எதிர்ப்பு ஆர்ப்பாட்டம்-திருவாரூர் (02-10-13)
அடுத்த செய்திதியாக தீபம் திலீபன் மற்றும் கேணல் சங்கர் ஆகியோர் நினைவு எசன் நகரில் நினைவுகூரப்பட்டது