தமிழர் தந்தை சி.பா ஆதித்தனார் அவர்களின் சிலைக்கு செந்தமிழன் சீமான் அவர்கள் வீரவணக்கம் செலுத்துகிறார்.

23

உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு என்னும் உன்னத லட்சியத்தை தம் இறுதி வாழ்நாள் வரை நெஞ்சினில் ஏந்தி தமிழின விடுதலைக்காகவும் தமிழ் மொழியின் வளர்ச்சிக்காகவும் தன் வாழ்நாளை அர்ப்பணித்துவரும் நாம் தமிழர் இயக்கத்தின் நிறுவனருமான தமிழர் தந்தை அய்யா சி.பா ஆதித்தனாரின் 30 ஆவது ஆண்டு நினைவு நாளை ஒட்டி நாம் தமிழர் கட்சி தனது வீரவணக்கத்தை செலுத்துகிறது.

 24-5-2011 அன்று காலை 9.00 மணிக்கு சென்னை எக்மோர் காவல் துறை ஆனையாளர் அலுவலகம் அருகில் உள்ள பெருந்தமிழர் தமிழர் தந்தை சி.பா. ஆதித்தனார் அவர்களின் சிலைக்கு மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்துகிறார். எனவே நாம் தமிழர் கட்சியின் தோழர்கள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் அனைவரும் இதில் திரளாக கலந்து கொள்ளுமாறு கெட்டுகொள்ளப்படுகிறார்கள்.

முந்தைய செய்திதமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார் வழியில் இன விடுதலைக்காய் பயணிப்போம் – சீமான்
அடுத்த செய்திமக்களை திசை திருப்ப ஈழப் பிரச்சினையில் கருணாநிதி போட்ட ‘நாடகம்’- தயாநிதி மாறன் – விக்கி லீக்ஸ்